ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து
உழைப்பினால் உயர்ந்து நின்று காட்டி
எளிமையாய் வாழ்ந்து பண்பாய் நின்று
சிகரத்தை தொட்ட தலை மகனே !
மார்க்கம் உயர்வாய் நினை என ஊக்கம் தந்து
நோக்கம் தனை அடைய தாக்கம் தந்து
ஆக்கப் பூர்வமாய் அயராது உழைத்து
தீர்க்க தரிசியாய் வாழ்ந்த மகானே !
விளக்கை ஏற்றுதனிலே இந்துத்வம் கண்டாய்
விளக்கு திரி தனிலே கிருத்துவம் கண்டாய்
ஏற்றும் உன் தனிலே இஸ்லாம்யம் கண்டாய்
விளக்கொளி தனிலே மத நல்லிணக்கம் கண்டாய் !
தனுஷ் கோடியில் பிறந்த நீ
முதல் குடி மகனாய் உயர்ந்தீரே
நூற்றி முப்பது கோடி மக்களுமே
போற்றிப் புகழும் பொக்கிஷம் நீ !
துணிவு கொண்டு பெரும் லட்சியத்தை
மாணவ மணிகளை ஊக்குவித்து
கனவு காணுங்கள் எனக் கூறி
நனவு ஆக்கிட உழைத்திடு என்றீரே !
இருபது இருபதாம் ஆண்டு தனிலே
இந்திய நாடு தலைசிறந்து நின்றிட
வல்லரசு நாடாக உயர்ந்து நின்றிட
கனவு கண்ட விருதுகள் நாயகனே !
அக்னி புத்ரியை விண்ணுக்கு தந்து
அக்னி சிறகுகளை மண்ணுக்கு தந்து
அக்னி ஏவுகணை நாயகனாய் நின்று
அக்னி ஜுவாலயாய் ஒளிர்ந்து நின்றீரே !
விஞ் ஞானியாய் உழைத்து உயர்ந்து
கலை ஞானியாய் கவிதை இயற்றி
அஞ் ஞானத்தை விலக்க வந்த
மெய் ஞானச்சுடர் தீப விளக்கே !
பிறப்பு என்பது சம்பவமே
இறப்பு என்பது சரித்திரமே என
உழைப்பினால் சிகரம் எட்டிய
திருநாடு கண்ட பாரத ரத்தினமே !
அரும் பெரும் காண்பதே லட்சியம்
சிறு கனவு பெரும் குற்றம் என
இறுதி மூச்சு வரை உரை ஆற்றிய
திருமணம் கானா பேராசியரே !
கட்டுரை பல தந்தவன் நீ
கவிதையும் பல தந்தவன் நீ
இசையில் நாட்டம் கொண்டவன் நீ
வீணையும் இசைத்திட்ட மேதை நீ !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment