இயற்கையும் இறையும்
இரண்டு அல ஒன்றே
இயற்கை வளம் கண்டின்
இறையருள் நல்குமே
இருந்து வாழ்ந்திட
நில மடந்தையாய்
அருந்திட பருகிட
நிறைந்த நீராய்
சுவாசித்து வாழ்ந்திட
பிராண வாயுவாய்
சுவைத்திட எரிமூட்டும்
அக்னி நெருப்பாய்
பறந்து மகிழ்ந்திட
பரந்த ஆகாயமாய்
பஞ்ச பூதங்களாய்
துணையாய் நிற்கும்
அரணாய் மலையும்
கரணாய் ஆதவனும்
பொலிவாய் நிலவும்
பலவாய் விண்மீனும்
விண்ணை முட்டிடும்
உயர்ந்த சிகரமும்
ஊற்றாய் அருவியும்
தொடர் பள்ளத்தாக்கும்
நெளிவு சுளிவாய்
அழகிய பாதையும்
மழை பொழிந்திட
எழில்மிகு மரங்களும்
பசுமை நிறைந்த
இலையும் பயிரும்
கனிந்து தொங்கிடும்
வண்ணமிகு கனிகளும்
நீல நிற வண்ண
கடலும் வானமும்
கோடைக் காலத்து
பட்டொளி வெயிலும்
வசந்த காலத்து
இளந் தென்றலும்
கார் காலத்தே
பொழியும் மழையும்
இளம்பனி காலத்தே
சில்லென குளிரும்
துள்ளி வரும் நதியும்
துள்ளாத பாறையும்
பூத்துக் குலுங்கிடும்
நறுமணம் தந்திடும்
நிறைமிகு வண்ணமொடு
நந்தவனச் சோலையும்
இசையைத் தந்திடும்
கூவும் குயிலும்
வானவில் தோற்றமும்
வண்ணமிகு முகிலும்
விண்ணைப் பிளந்திடும்
முழங்கிடும் இடியும்
கண்ணப் பறித்திடும்
மின்னல் ஒளியும்
சந்தி வேளையில்
அந்தி மழையும்
ஆலங் கட்டியும்
அற்புதக் காட்சியும்
பதுங்கிட குகையும்
பொங்கிட எரிமலையும்
அடர் பெருங்காடும்
சுடர் பாலைவனமும்
கானல் நீரும்
கனிம வளமும்
நவமணி தான்யமும்
நவரத்ன மணியும்
மூன்றாம் பிறையும்
முழு நிறை மதியும்
விடியற் காலையும்
மயக்கும் மாலையும்
பௌர்ணமி நிலவில்
பொங்கும் அலையும்
கண்கவர் நீள்மிகு
கடற்கரை மணலும்
ஊர்வன பறப்பன
நடப்பன மிதப்பன
பற் பல விதமாய்
எண்ணற்ற படைப்பும்
ஆழ் பெருங்கடலும்
அடர்பனி மலையும்
தீவும் தீபகற்பமும்
தட்ட சமன் வெளியும்
அண்ட பேரண்டமும்
அணுத் துகள்களும்
அகண்ட கண்டங்களும்
அற்புத கோள்களும்
கண்ணுக்கு விருந்தாய்
மனதினைக் கவர்ந்திடும்
இயற்கையைப் போற்றி
இனிதாய் காத்திடின்
இனிய வாழ்வும்
இறை அருளும்
இல்லம் நாடி வந்து
இன்புறச் செய்யுமே
இயற்கையைப் போற்றி
இன்னல் தவிர்ப்போம்
இயற்கையோடு ஒத்து
இனிதாய் வாழ்வோம்.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment