Thursday, May 14, 2020

கரு ஒன்று கிடைத்தால்



கரு ஒன்று கிடைத்தால்

போதுமே நல்ல கரு ஒன்று

கிடைத்தால் போதுமே

கவி புனனையத் தூண்டுமே (க))

 

எழிலோவியம் கண்டால் போதுமே

எந்தன் மனம்  துள்ளியாடுமே

எதுகை மோனை சந்தமுடன்

எழில் கவி புனையத் தோணுமே (க)

 

தேன் மதுரக் குரல் கிடைத்தால்

எந்தன் கவிப்பாமாலையாகுமே

விஸ்வநாதன் கண்டிருந்தால்

மெல்லிசைப் பா உதித்திருக்குமே

 

இசைஞானி கண்டிருந்தால்

துள்ளலிசைப் பா உதித்திருக்குமே

இசைப்புயல் கண்டிருந்தால்

தூள் இசைப்பா உதித்திருக்குமே

 

சிவ ராம தாஸன் பணியும்

இறை திருவருளாலே என் பா

வெற்றி மாலை சூடி தருமே

வான் புகழினைப் பெற்று தருமே (க) 


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: