அரிய கல்விச்
செல்வம் தந்து நின்று
அறிவுக் கண்ணைத்
திறப்பவராம்
தன்னலம் சிறிதும்
ஏதும் இன்றியே
தன் மாணவ நலம்
மட்டும் காண்பவராம்
எண்ணும் எழுத்தும்
கற்று தந்து
ஏட்டுச் சுவடி
இலக்கணம் காட்டி
ஏணிப் படியென
இருந்து நின்று
ஏற்றம் தந்து
எழில் காண்பவராம்
உற்சாகம் ஊக்கம்
தந்து நின்று
உலகு ஒழுக்கம்
சொல்லித் தந்து
உன்னதமான பணி
ஏற்று நின்று
உவகையுடன் நற்சேவை
புரிபவராம்
அன்பும் பண்பும்
சொல்லி்த் தந்து
அன்னை எந்தைக்குப்
பின்னே வந்து
அகிலம் காக்கும்
இறை முன்னே நின்று
அவனியில் நல்வழியைக்
காட்டுபவராம்
அயராது என்றென்றும்
உழைப்பவராம்
ஆன்றோர் கூற்றுப்
படி வாழ்பவராம்
ஆசிரியரை என்றென்றும்
மறவாமல்
அவரைப் பணிந்து
போற்றி நிற்போம்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment