Thursday, May 14, 2020

ஆசிரியர்


அரிய கல்விச்

செல்வம் தந்து நின்று

அறிவுக் கண்ணைத்

திறப்பவராம்

தன்னலம் சிறிதும்

ஏதும் இன்றியே

தன் மாணவ நலம்

மட்டும் காண்பவராம்

 

எண்ணும் எழுத்தும்

கற்று தந்து

ஏட்டுச் சுவடி

இலக்கணம் காட்டி

ஏணிப் படியென

இருந்து நின்று

ஏற்றம் தந்து

எழில் காண்பவராம்

 

உற்சாகம் ஊக்கம்

தந்து நின்று

உலகு ஒழுக்கம்

சொல்லித் தந்து

உன்னதமான பணி

ஏற்று நின்று

உவகையுடன் நற்சேவை

புரிபவராம்

 

அன்பும் பண்பும்

சொல்லி்த் தந்து

அன்னை எந்தைக்குப்

பின்னே வந்து

அகிலம் காக்கும்

இறை முன்னே நின்று

அவனியில் நல்வழியைக்

காட்டுபவராம்

 

அயராது என்றென்றும்

உழைப்பவராம்

ஆன்றோர் கூற்றுப்

படி வாழ்பவராம்

ஆசிரியரை என்றென்றும்

மறவாமல்

அவரைப் பணிந்து

போற்றி நிற்போம்

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்

 

 

No comments: