Thursday, May 14, 2020

டெங்கு


ஈ என்பர் கொசு என்பர்

ஓரறிவு ஐந்து என்பர்

ஆறறிவு மாந்தர் நாமே

இதற்கு இரை ஆகலாகுமோ

 

டெங்குவைப் பரப்பிடும்

ஏடிஸ் கொசுக்கள்

தங்குவதும் பெருகுவதும்

தேங்கிடும் நன்னீரிலே

 

தேங்கிடும் நன்னீரைத்

தேங்காது தடுத்து விடின்

தங்கிடும் கொசுக்கள்

தங்காது ஓடிடுமே

 

தண்ணீரை நன்னீரை

தேங்காது தடுத்திடுவோம்

இன்னுயிரை நன்னுயிரை

போகாது காத்திடுவோம்

 

விழிப்புடன் இருந்திட்டால்

இழப்பு ஏதுமிலையே

இழப்பு தனைத் தடுத்திடவே

விழிப்புணர்வு முகாமிங்கே

 

விழிப்புடன் இருந்திடுவோம்

முனைப்புடன் தடுத்திடுவோம்

சுற்றுப்புறச் சூழல் தனை

சுத்தமாய் வைத்திடுவோம்

 

இயற்கையெனும் மரங்களே

இறைவன் நமக்களித்த வரம்

பப்பாளி இலைச்சாறு

பருகிட பருகிடவே

 

இரத்த வெள்ளணுக்கள்

பன்மடங்காய் பெருகிடுமே

டெங்கு தனை எளிதாய்

முறித்து விடலாமே


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: