தஞ்சை கோபுரம்
தந்து அருளிய
தவப் புதல்வனவன்
தமிழ் காத்த மன்னவன் (த)
தமிழ் மீது பற்று கொண்ட
சோழ வேந்தனவன்
தமிழ் போற்றி வளர்த்து நின்ற
தானைத் தலைவனவன்
தமிழுக்குப் பெருமை
அருமை சேர்த்தவனவன்
தமிழகம் கண்டு நின்ற
ராஜ ராஜ சோழனவன்
தமிழின் உயிரெழுத்து
ஈராறே
சிவலிங்கம் உயரமும்
ஈராறே
தமிழின் மெய்யெழுத்து
மூவாறே
ஆவுடை பீடமுயரமும்
மூவாறே
தமிழின் உயிர்மெய்யெழுத்து
இரு நூற்றி பதினாறே
கோபுரத்தின் உயரமும்
இரு நூற்றி பதினாறே
நற்றமிழ் எழுத்துக்கள்
இருநூற்று நாற்பத்தி ஏழே
நந்தி சன்னதி தூரம்
247 அடியே
தலை கோபுர நிழல்
தரையில் வீழாத
சிற்பங்கள் நிறைந்ததொரு
பிரம்மாண்ட கோவில்
தட்சண மேரு மலை
தந்த ராஜனவன்
தமிழர்க்கு பெருமை
சேர்த்த வேந்தனவன்
ஏடு தந்த நாதனவன்
ஏற்றமிகு காவலனவன்
சாணக்கிய சாதுர்ய
சோழ வேந்தனவன்
நுண்ணிய நுட்பம்
கொண்ட நாதனவன்
நான்மறை கூற்றுப்படி
நாடு ஆண்டவன்
அக்கையார் குந்தவையின்
அறிவுரை வழியிலே
அறம் போற்றி வளர்த்த
அரசனவன்
வாழிய வாழிய
ராஜ ராஜ சோழன் நாமம்
வளர்க வளர்க
அவரது புகழ் என்றென்றும்.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
1 comment:
Arumai
Post a Comment