Thursday, May 14, 2020

சுதந்திரம்


சொத்து இழந்து சுகமதை இழந்தும்

சோதனை கண்டு சோகம் கண்டும்

 

சிறை சென்று செக்கு இழுத்தும்

கல் உடைத்து பிரம்படி கண்டும்

 

குருதி சிந்தி தேகம் மெலிந்து

வலி தாங்கி இன்னுயிர் விட்டும்

 

தந்தை தாய் தனயனைப் பிரிந்து

பட்டம் புகழ் பதவியும் துறந்து

 

தன்னலம் இன்றி பாடு பட்டு

பொது நலம் ஒன்றே கண்டு

 

உணர்ச்சி பொங்க கண்ணீர் மல்க

தியாகச் செம்மல் பல கண்டு தந்த

 

உயிரினும் மேலாய் ஓங்கி இருக்கும்

பாரத அன்னையைப் போற்றி நின்று

 

பேச்சுக்கும் மூச்சுக்கும் பாட்டுக்கும்

எழுத்துக்கும் போராடி கிடைத்த

 

இனிய சுதந்திரம் போற்றி நிற்போம்

இந்திய பாரதத்தை காத்து நிற்போம்

 

கிடைத்த சுதந்திரம்  போற்றி நின்று

பேணிக் காத்திட உறுதி அளிப்போம்

 

ஊழல் இலாத பாரதம் காண்போம்

உரிமை மீறாத சுதந்திரம் மகிழ்வோம்

 

சிறுமியர் மகளிர் மானம் காப்போம்

சீர் குலையாத  வாழ்வு காண்போம்

 

சுதந்திரம் கிடைத்திட போராடித் தந்த

தியாகியரை நினைந்து போற்றுவோம்

 

வாழ்க வாழ்க வாழ்க பாரத அன்னை

வளர்க ஓங்குக வான்வரை அவள் புகழ் !


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: