Thursday, May 14, 2020

திருவள்ளுவர்


ஈரடி குறளை

தந்தானடி

ஈரேழு புவனம்

போற்றும் (ஈ)

 

மயிலையில் வந்து

உதித்தானடி

மாந்தர் தம்

வாழ்வு உய்த்திடவே

மறை வேதம்

ஐந்தை தந்தானடி

முப்பாலை உணர்த்தும்

தெய்வ நூலடி  (ஈ)

 

அகரத்தில் தொடங்கி

னகரத்தில்  முடிகின்ற

பொய்யா மொழி

வாயுறை வாழ்த்திதுவே

அன்பு நெறியைக் கூறும்

உயர் ஞானம் புகட்டும்

குறள் வெண்பாவினை

தந்தானடி (ஈ)

 

வையத்து வாழ்வாங்கு

பேர் புகழ் கொண்ட

செந்நாப் புலவர்

அவரடி அவரடி

திருவள்ளுவர் எனும்

பேர் கொண்டானடி

பைந்தமிழ் செம்மொழி

இலக்கிய நூலடி (ஈ)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்

 

 

 

 


No comments: