Tuesday, May 12, 2020

அண்ணல் மகாத்மா காந்தி




சத்தியாக்கிரகம் செய்தவராம்

சத்தியத்தில் வாழ்ந்தவராம்

சத்ய சோதனை தந்தவராம்

சத்ய சோதனை வென்றவராம்

 

ஒத்துழையாமை இயக்கத்திலே

ஒற்றுமையைக் கொண்டவராம்

ஒவ்வாத கருத்துக்கள் விலக்கி

ஒருமைப் பாட்டை கொண்டவராம்

 

ஆடம்பரம் துறந்து நின்று

அரை ஆடையில் வாழ்ந்தவராம்

அந்நிய ஆதிக்கம் விலக்கிடவே

அயராது நின்று போராடியவராம்

 

இன்னல் பல கண்டவராம்

இடர்பாடுகள் பல களைந்தவராம்

இனிய சுதந்திரம் பெற்றுத் தந்தவராம்

இனிய அண்ணல் காந்தியே

 

பாரதத்தின் தவப் புதல்வராம்

பாரதத்தின் எந்தையாம்

பாரதத்தின் ரத்தினமாம்

பாரத மகாத்மா புகழ் வாழிய!



சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்




No comments: