நல்லதோர் நண்பன்
நமக்கோர் வரப் பிரசாதம் (ந)
நிலைக் கண்ணாடியாய்
நிலைத்து நிற்பரே
நிழலாய் பின் தொடர்ந்து
நாளும் இருப்பரே ! (ந)
நிலைக் கண்ணாடி
பொய் உரைப்பதில்லை
நிழல் என்றும் நம்மை
விட்டு பிரிவதில்லை
நல்லதோர் நண்பன்
நெஞ்சமது திறந்து
நயம்பட மெய்யுரைத்து
நண்பனுக்குரைப்பான் (ந)
நிழலாய் பிரியாது
நற்கரம் தந்திடுவான்
நட்புக்கு இலக்கணமாய்
நல்வழி காட்டிடுவான்
நெஞ்சமதில் நிறைந்து
என்றும் நீங்கா
நினைவலைகள் நீந்திட
நிறை மகிழ்ச்சி தந்திடும் (ந)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment