உதரத்தில் ஒன்று
இணைந்தோம்
உதிரத்தில் ஒன்று
இணைந்தோம்
உறவென பிணைந்து
நின்றோம்
உதறாது இணைந்து
நின்றோம்
உணவினைப் பகிர்ந்து
உண்டோம்
உரிமையாய் பழகி
நின்றோம்
பாலும் சோறும்
பகிர்ந்து நின்றோம்
பாசமும் அன்பும்
பகிர்ந்து நின்றோம்
குரல் கொடுத்தோம்
தோள் கொடுத்தோம்
துணை நின்றோம்
துயர் துடைத்தோம்
தாய் தந்தை
ஒன்று கொண்டோம்
தரணியில்
இணைந்து நின்றோம்
சகா வாய் குழாமிட
சகோதரன் என ஆனோம்
சக உதரம் பகிர்ந்திட
சகோதரன் என ஆனோம்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
4 comments:
மிக அருமை!
அருமை
அருமை
Post a Comment