Monday, May 11, 2020

அன்னையர் தினம்


 

தாய்

வைப்பு நிதியும் மாத வாடகையும்
கேட்கும் இவ்வையம் தனிலே
வைப்பு நிதி ஏதும் ல்லாது

வாடகை நிர்பந்தம் இல்லாது


தங்க தன் கருவினையும் தந்து
தாங்கா சுமையையும் தாங்கி
தன்னலம் சிறு துளியும் இல்லாது
தன் குருதியும் தந்து நின்று


கண் துஞ்சாது காத்து நின்று

கடும் வலி பொறுத்து நின்று  

கருத்து கவனம் கொண்டு நின்று    

கண் கலங்காது பார்த்து நின்று


ஈரைந்து திங்கள் சுமை தாங்கி
அன்பினை அள்ளி பொழிந்து
பாசமுடன் பாலூட்டி பின் பாராட்டி
நேசமுடன் நீராட்டி பின் சீராட்டி


தாய்மையுடன் தூளி தாலாட்டி
தூய்மை வாய்மை சோறூட்டி
நேர்மை மேன்மை மேல் கூட்டி
அருமை பெருமை யாவும் காட்டி


கலி யுகத்தில் உயிர் மெய் ஈந்த
கைம்மாறு செய் இயலாத
கரம் சிரம் கொண்டு தொழும்
கண் கண்ட தெய்வமே உயரிய தாய் !


சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

 


1 comment:

Unknown said...

அருமை அருமை