தாய்
வைப்பு நிதியும் மாத வாடகையும்
கேட்கும் இவ்வையம் தனிலே
வைப்பு நிதி ஏதும் இல்லாது
வாடகை நிர்பந்தம் இல்லாது
தங்க தன் கருவினையும் தந்து
தாங்கா சுமையையும் தாங்கி
தன்னலம் சிறு துளியும் இல்லாது
தன் குருதியும் தந்து நின்று
கண் துஞ்சாது காத்து நின்று
கடும் வலி பொறுத்து நின்று
கருத்து கவனம் கொண்டு நின்று
கண் கலங்காது பார்த்து நின்று
ஈரைந்து திங்கள் சுமை தாங்கி
அன்பினை அள்ளி பொழிந்து
பாசமுடன் பாலூட்டி பின் பாராட்டி
நேசமுடன் நீராட்டி பின் சீராட்டி
தாய்மையுடன் தூளி தாலாட்டி
தூய்மை வாய்மை சோறூட்டி
நேர்மை மேன்மை மேல் கூட்டி
அருமை பெருமை யாவும் காட்டி
கலி யுகத்தில் உயிர் மெய் ஈந்த
கைம்மாறு செய் இயலாத
கரம் சிரம் கொண்டு தொழும்
கண் கண்ட தெய்வமே உயரிய தாய் !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
1 comment:
அருமை அருமை
Post a Comment