ஆண்டி முதல் ஆண்டவன்
வரை எனை ஏற்பர்
அட்டங் கருமையிலும்
நான் இருப்பேன்
அழகு வண்ணத்திலும்
நான் மிளிர்வேன்
குடை என்னும்
பெயர் கொண்டேன்
கரு மேகம் சூழ்ந்து
நின்றால் எனை தேடுவர்
கொளுத்தும் வெயில்
என்றாலும் எனை நாடுவர்
மழை நீரில் நனையாமல்
நான் காப்பேன்
சுடரொளி கதிர் வீச்சு
தடுத்து காப்பேன்
செங்கோலேந்தி ஆட்சி
புரியும் கொற்றவனுக்கு
வெண் கொற்றக் குடையாய்
வீ தி உலா வருவேன்
வேங்கட மலை நின்று
அருளும் ரமணனுக்கு
வெண் பட்டுக் குடை
சேவையில் பவனி வருவேன்
காற்று மழை வெயில் யாவும்
தாங்கி நிற்பேன்
மாந்தர் மனம் மகிழ
நான் விரிந்திருப்பேன்
தளர்ந்த முதியோருக்கு
ஊன்று கோலாயிருப்பேன்
தற்காப்பு ஆயுதமாயும்
துணையாய் இருப்பேன்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment