சீமையில் இருந்து வந்தவையாம்
சிறு சிறு விதைகளாய் இருந்தவையாம்
சாலையில் மா மரமாய் வளர்ந்தவையாம்
சமையலில் விறகாய் உதவுபவையாம்
வேர்கள் நீண்டு ஆழ வளர்பவையாம்
வேளாண்மையை அறவே அழிப்பவையாம்
வறட்சி நிலமாய் மாற்றுபவையாம்
விளை நிலத்தை அழிப்பவையாம்
நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சிடுமாம்
நச்சுத் தாவரமாய் வளர்ந்திடுமாம்
எவ்வொருப் பூச்சியாலும் பாதிக்காது
ஏனையத் தாவரங்களை அழித்திடுமாம்
பயிர் காக்கும் வேலியாய் நின்றவையாம்
பக்க வேர்களிலால் வளர்ந்து நிற்பவையாம்
ஈரப் பதத்தையே உறிஞ்சி நிற்பவையாம்
மழை நீரையேத் தடுத்து நிற்பவையாம்
நாற்பது அடி உயரம் வளர்பவையாம்
நெடுநெடுவென நீண்டு நிற்பவையாம்
நல் மஞ்சள் பூவைக் கொண்டவையாம்
நச்சுக் காற்றை வெளித் தள்ளுபவையாம்
விவசாயி வாழ்வைக் கெடுத்தவையாம்
தான் மட்டும் செழிப்பாய் இருந்திடுமாம்
வேலிக்காத்தான் எனப் பேர் கொண்டு
வேதனை தந்திடவே வந்தவையாம்
அந்நிய சீமைக் கருவேலம் மரங்களை
அடியோடு அறுத்து எறிந்திடுவோம்
அல்லல் தனைப் போக்கி நின்று
ஆனந்தம் பொங்கிட வாழ்ந்திடுவோம்.
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment